Saturday, February 12, 2011

குவைத் காயிதேமில்லத் பேரவையின் நன்றி நவிலும்மடல்.,

பிஸ்மில்லாஹிர்ரகுமானிற்ரஹிம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு
கோரிக்கை ஏற்று முதல்வர் ஆணை!
குவைத் காயிதேமில்லத் பேரவையின்
நன்றி நவிலும்மடல்:
=====================================
கடந்த 2010 டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை,தாம்பரம் ரயில்வே மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானத்தை அம்மேடையிலேயே ஏற்று கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், சமச்சீர்கல்வியில் உர்து,
அரபி, மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடங்கள்இடம் பெறவும் தேர்வுகள் நடத்தவும்,மதிப்பெண்கள் வழங்கவும்,15-12-2010 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் அறிவித்ததை நடைமுறைப்படுத்த இந்த அரசாணைபிறக்கப்படுவதாகவும் இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறுபடைத்த இம்மாநாட்டில்14 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவைகளில் பலவற்றை மேடையிலேயே ஏற்று கொண்ட முதல்வர் கலைஞர்,வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம்அமைக்கப்படும் அலிகர்பல்கலைக்கழகக்கிளை தமிழகத்தில் அமைக்க முயற்ச்சிக்கப்படும்; முஸ்லிம்களுக்கு10-சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்ற அறிவிப்பையும் வெளிட்டார்.


‘முஸ்லிம் லீக் செல்லும் வழியே சமுதாயம் செல்லும் வழி’ என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கலைஞரின் அறிவிப்பிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் மதிப்பின்மிகு “முனீருல்மில்லத்” பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மாநில ‘முஸ்லிம் லீக் மாநாட்டு கோரிக்கையாகிய தமிழ்நாட்டில் முஸ்லிம் களுக்குதனிஒதிக்கீடு உயர்த்தப்படும் இதனைமுழுமையாக சமுதாயத்தை சென்றடையகடந்த10-02-2011ல்அரசுதலைமைசெயலாளர் அவர்கள் கீழ் குழுஒன்றை அமைத்து கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் மாநிலமாநாட்டுதீர்மானத்திற்கு சட்டவடிவம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி நல வாரியம் தமிழக சட்டப்பேரவையில் மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேற்கண்டதீர்மானத்திற்கும் திட்டவடிவத்திற்கும் பெறும் முயற்ச்சி மேற்கொண்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம் .காதர்மொகிதீன்சாஹிப் அவர்களுக்கும்,தமிழகமுஸ்லீம் லீக் முக்கிய பிரமுகர்கள், மற்றும் இதற்காக பாடுபட்ட தலமைமைநிலைய நிர்வாகிகளுக்கும்`மிக நன்றிதனை தெரிவித்துக் கொள்வதுடன், அவையாவையும் மாநில முஸ்லிம் லீக் யின் வழி மொழிந்து,


மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும்,துணைமுதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்,
குவைத் காயிதே மில்லத் பேரவை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இதனை நாளாது தேதி: 11-2-2011 அன்று குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் நடைபெற்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தில் நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றி மகிழ்கிறோம்.
என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.. வஸ்ஸலாம்..!

தலைவர்,
R.M.முஹம்மது பாருக் & நிர்வாகிகள்
காயிதே மில்லத் பேரவை குவைத்.

தீர்மானத்தொகுப்பு: கம்பளி A.முஹம்மதுபஷீர்
                                                               சோழபுரம் I. ஜாஹீருதீன்

No comments: