Friday, March 11, 2011

குவைத் காயிதே மில்லத் பேரவையின் கண்டன அறிக்கை !

பிஸ்மில்லாஹிர்ரகுமானிர்ரஹிம்
பெறுவோர்:
   
இந்திய யூனியன் முஸ்லிம்லீக்- தமிழ்நாடு
முஸ்லிம்லீக் தலைமைஅலுவலகம்
காயிதேமில்லத் மன்ஞில்,
எண்:36, மரைக்காயர் லெப்பைதெரு
சென்னை-600001.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


நம் சமுதாயத்திற்கு மதிப்பளித்து முடிவெடுக்கும் தனித்திறமை தலைமைக்கு,தலைமை எடுத்த முடிவில் தலைதாழ்ந்துநிற்கும் குவைத் காயிதே மில்லத் பேரவையின் கண்டன அறிக்கை :


வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் தாங்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பது; சமீபகாலமாக துளிர்விட்டு மொட்டாகி பூவாக மலர இருந்த எங்களின் சேவையில் வெண்ணீரைஊற்றி காயவைக்க நினைத்து விட்டீர்களோ..?என்று எண்ணூமளவிற்கு, தாங்கள் எடுத்த முடிவு சமுதாயத்தை அழியவைக்க, அடகுவைக்கஎண்ணூம் அடுத்தவர்களின் இந்த நிலை எங்களின் செயல்பாடுகளை முடக்க முனைந்து இருக்கிறது. குவைத்தில் உள்ள குவைத் காயிதேமில்லத் பேரவையின் முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது, பரவலாக குவைத்வாழ் தமிழக நம் சமுதாய மக்களின் மனதை மிக வேதனையில் ஆழ்த்தியுள்ளதுநம் சமுதாய மக்களை மதிக்காமல் தாங்கள்எடுத்த முடிவுக்கு நொண்டிசாக்குகள் ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை..!!!


மூன்று சீட்டுகளை பெற்று ஒரு சீட்டினைஅவர்கள்கேட்டுக் கொண்டதற்கிணங்க விட்டுவிட்டதுடன், இரண்டுபோதும் என்று, அன்புக்கு ஒன்று, ஆசைக்கு ஒன்று என்றும் குடும்பகட்டுப்பாடு கொள்கைபோல்,சமுதாயத்தை கேவலப்படுத்துவதற்கு பதிலாக, பெற்ற மூன்றையும் அவர்களிடமே(திமுகவிடம்) கொடுத்துவிட்டுநாங்கள் வெளியிலிருந்துஆதரவு,  கூட்டணியினின் வெற்றிக்கு. பாடுபடுவது என்றநிலை எடுத்திருந்தால்..:


நம் சமுதாயத்தின்,தாய்சபை(லீக்)னரின் ஒட்டுமொத்த பாரட்டுனையும்அங்கீகாரத்தையும் பெற்று முஸ்லிம்லீக் தனிதன்மையுடனும், லீக்கின் எதிர்வரும்காலம் பலமான தளமாகவும்,களமாகவும் அமைய பெறுவதுடன் தன்மான காத்த(சிங்கமாக) தலைமையாக விளங்கிருப்பீர்கள்..?! அப்படியொரு தலைமையாக வரவேண்டும் என்றும் நம்முஸ்லீம்லீக்கையும், சமுதாயத்தையும் கட்டிகாக்கும் அவர்அரனாக வரவேண்டும் என்றும் ஆசைபடுகிறோம், அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நம் சமுதாயத்தின், கட்சி(லீக்)யின் தன்மானம் காக்க மேலும் ஒரு பணிவான வேண்டுகோள்:- எதிர்வரும் காலத்தில் தமிழக முஸ்லிம் சமுதாயம் நலம் பல பெற்றிடவும்,வேற்றுமையில்ஒற்றுமைக் கண்டு நம்தாய் சபையில்அனைவரும் ஒர்அணியில் திரண்டிடவும்அதன் முலம் நம் தாய்சபை முஸ்லீக் தமிழகமக்களின் பிரதிநிதித்துவ சபை இது ஒன்றே என்ற நிலைபாடு உருவாகவும், அமைந்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைப்பதுடன் தமிழக முஸ்லிம்லீக் தலைமையை (மனம் புண்படாமல்) மாற்றுவதுடன், உத்வேகமும், விவேகமும், சீரியபண்பும்கொண்ட புதிய தலைமையினை  உடனடியாக தேர்ந்தெடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


நன்றி வஸ்ஸலாம்..!
தங்களன்புள்ள,
காயிதேமில்லத்பேரவை
குவைத்.


No comments: