Thursday, March 17, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தேர்வு.

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை - 1, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில் இன்று நடைபெற்றது. 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு.


1) துறைமுகம் - அல்தாப் ஹுசைன்


திருப்பூர் அல்தாப் என்று அழைக்கப்படும் அல்தாப் ஹுசைன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாடர்ன் சிட்டி தெருவில் உள்ள 14 -ஆம் இலக்க வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காலம் சென்ற பிரபலமான தலைவர் திருப்பூர் மைதீன் (முன்னாள் எம்.எல்.ஏ) புதல்வராவார்.


இவருக்கு வயது 60. மிகச் சிறந்த பேச்சாளரான இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுபவர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர். தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றவர்.


டன்லப் இந்திய கம்பெனியில் முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் இருந்தவர் தற்போது சமுதாய உரிமை என்ற மாத பத்திரிக்கையின் ஆரிரியராக உள்ளார். சிறந்த பொது நல ஊழியர்


2) வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்


வாணியம்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது பணியாற்றும் எச். அப்துல் பாசித் வேலூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெரு சந்து, 7/3 இலக்க வீட்டில் குடியிருந்து வருகிறார். டிப்ளமோ பட்டதாரியான இவருக்கு வயது 46. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நீண்ட கால உறுப்பினர். மிகச் சிறந்த பேச்சாளர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.


தோல் காலணி உருவாக்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சிறந்த பொது நல ஊழியரான இவர் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்தவர். பல பொதுநல அமைப்புகளிலும் ஜமாஅத்திலும் பொறுப்பேற்று பணி செய்து வரக்கூடியவர்.


3) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது

ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எம். முஹம்மது ஷேக் தாவூத், நாகூர் தெற்குத் தெருவில் உள்ள 34 ம் இலக்க வீட்டில் குடியிருந்து வருகிறார்.


டிப்ளமோ மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியான இவருக்கு வயது 60.


மிகச் சிறந்த பொது நல ஊழியரான இவர் நாகூர் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும், கவுதியா சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்தாபனங்களின் சார்பில் ஆண், பெண் கல்வி நிலையங்கள், தர்மஸ்தானங்கள் நடைபெற்று வருகின்றன. நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளராகவும் உள்ள இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.

No comments: