Friday, April 8, 2011

வெளிநாடு வாழ் முஸ்லிம் தமிழக சகோதர சகோதரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!

அன்புடையீர்..! அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்..)


வருகிற ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வாணியம்பாடியில் - H. அப்துல் பாசித் அவர்கள்
துறைமுகத்தில் - திருப்பூர் M. அல்தாப் ஹூசைன் அவர்கள்
நாகப்பட்டினத்தில் - M. முஹம்மது ஷேக் தாவூத் அவர்கள்

ஆகியோரும், மற்றும் 231 தொகுதிகளில் தோழமை கட்சி வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர் என்பதை தாங்கள் அறிந்ததேயாகும்.


முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு, உலமாக்கள் நலவாரியம் அமையப்பெற்றது, சமச்சீர் கல்வியில் அரபி, உருது மொழிகளில் இடம் பெற செய்தது, அதில் மதிப்பெண்கள் சான்று பெற வழிவகை செய்தது, சிறுபான்மை-சுயநிதி பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் வழங்கி சிறுபான்மை சமூக ஆசிரியர்கள், ஊழியர்கள் பயனடைய செய்தது, கட்டாய திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு தேர்தல் வாக்குறுதியினை பெறவும், சிறுபான்மையினருக்கு நீதிபதி திரு.ரெங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் அடிப்படையில் கூடுதல் இடஒதுக்கீடு வாய்ப்பினை பெற வலியுறுத்தவும், பல்வேறு இலவச சலுகைகள், மானியங்கள், உரிமைகள் மற்றும் திட்ட பயன்களை பெறவும், மாணவ, மாணவியர்ளுக்கான கல்விச் சலுகைகள், ஆண்கள், பெண்களுக்கான அரசு நல சலுகைகள், உரிமைகளை முழுமையாக பெற்றிடவும், பல்வேறு திட்டங்களை நம் சமுதாயத்திற்கு சாதகமாக பெற்றுத் தரவும், தமிழக மக்களுக்கான முற்போக்கான பல திட்டங்கள் தொடரவும், வளர்ச்சி பாதையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒருங்கிணைந்த நல்லாட்சி நடைபெறவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூன்று வேட்பாளர்களும் மற்றும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் ஏனைய வேட்பாளர்களும் வெற்றி பெற வாக்களிக்குமாறு தாயகத்தில் தாங்கள், தங்கள் குடும்பத்தார்களுக்கும், சுற்றம் நட்புக்கும் அறிவுறுத்துமாறு மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


தங்களன்புள்ள,
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
காயிதே மில்லத் பேரவை, குவைத்.
Website: www.qmfq8.blogspot.com


No comments: